ஹெமோர்ஹாய்டெக்டோமி என்பது மூலத்தை நீக்கும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இதில் உள் அல்லது வெளி மூல நோய் அகற்றப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில், ஆசனவாயைச் சுற்றி கீறல்களை உருவாக்கி, தொங்கி கொண்டிருக்கும் மூல கட்டிகளை துண்டித்து எடுத்து விடுவர். ஆசனவாயைச் சுற்றியுள்ள பகுதி வலியை உணரும் என்பதால், வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளை போன்று இதிலும் தையல் தேவைப்படலாம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு புண் ஆற சில வாரங்கள் வரை ஆகலாம். இந்த இடைப்பட்ட காலத்தில், நீங்கள் எவ்வாறு மலம் கழிப்பீர்கள்? இது பெரும்பாலான மூல நோயாளிகளின் மனதில் ஒரு பொதுவான கேள்வி.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது பலர் மலச்சிக்கலை அனுபவிக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3-ம் நாள் வரை பெரும்பாலானவர்களுக்கு குடல் இயக்கம் இருப்பதில்லை. மலம் கழிக்கும் போது, அறுவை சிகிச்சை செய்த இடம் நிச்சயமாக வலியை ஏற்படுத்தும். பரிந்துரைக்கப்பட்ட வலி நிவாரணிகள் வலியை குறைக்கும். இது குறித்து கவலைப்பட தேவையில்லை. நீர் அருந்துவது மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும். அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிட்ஸ் பாத் (Sitz bath) முறையை பரிந்துரைப்பார்கள். இது வலியைக் குறைத்து, குத தசைகளை தளர்த்தி, மலக்குடல் அழுத்தத்தையும் தணிக்கிறது. மலச்சிக்கலைக் குறைத்து இலகுவாக மலம் கழிக்க, நார்ச்சத்து சப்ளிமெண்ட்ஸ், மெக்னீசியாவின் பால் (Milk of Magnesia) ஆகியவற்றை அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைப்பார். கண்டிப்பாக வலி நாளடைவில் குறையும், அது தற்காலிகமானது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் மிக முக்கியமாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் மூல நோயில் இருந்து விடுபடலாம் என்பதே யதார்த்த உண்மை.
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com

No comments:
Post a Comment