Sunday, January 10, 2021

அரிசி உணவுக்கும் மூலநோய்க்கு உள்ள தொடர்பு

 


இந்தியாவின் பல பகுதிகளில் அரிசி ஒரு பிரதான உணவு ஆகும். உலகின் அரிசி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் முதன்மையான நாடாக திகழ்கிறது. இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அரிசியே பிரதான உணவு. இங்குள்ள அனைத்து மக்களும் கிட்டத்தட்ட தினசரி அரிசியை சோறு, இட்லி, தோசை போன்ற உணவு வடிவில் உட்கொள்கிறார்கள். முந்தைய நாட்களில் கைக்குத்தல் அரிசி வழக்கமாக இருந்தது. இன்றோ மெருகூட்டப்பட்ட வெள்ளை அரிசி அதன் இடத்தைப் பிடித்துவிட்டது. இதற்குக் காரணம், மெருகூட்டப்பட்ட அரிசி நீண்ட காலம் கெடாமல் இருப்பதும், அழகாக மணிமணியாக இருப்பதும் தான். மேலும் எளிதில் வெந்துவிடுவதும் ஒரு காரணம் ஆகும்.


பளபளப்பான வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசியைப் போலன்றி, வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அல்லது நார்ச்சத்து அதில் எதுவும் இல்லை. இந்த வகை அரிசி உணவை உட்கொண்டு, உணவில் காய்கறிகள்,  பழங்கள் போன்ற போதுமான நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமே. மலச்சிக்கல் ஏற்பட்டபின் கழிப்பறை இருக்கையில் நீண்ட நேரம் அமரும்போதும் ஆசனவாயை சுற்றி அதிக அழுத்தம் ஏற்படுத்துகிறது. இந்த அதிகப்படியான அழுத்தம் ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்புகள் வீங்கி, இறுதியில் மூல நோய் ஏற்பட வழி செயகிறது. அதனால்தான் அரிசி நுகர்வை கூடுமானவரை குறைத்து, புரதம், நல்ல கொழுப்பு மற்றும் நார் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது மட்டுமே நீங்கள் மலச்சிக்கலிலிருந்து விடுபடுவதை உறுதிசெய்து உங்களை மூலநோய் ஏற்படாமல் காப்பாற்ற வழி செய்யும். ஒரு வேளை உங்களுக்கு மூலநோய் இருந்தால், உங்கள் மூலநோய் மேலும் மோசமாவதை இந்த உணவுப் பழக்கவழக்கம் தடுக்கும்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com


No comments:

Post a Comment