Saturday, January 30, 2021

மூல நோய் தொற்றுநோயா? இது ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவும் தன்மை உள்ளதா?

 


ஹேமோர்ஹாய்டுகள் என்றும் அழைக்கப்படும் மூலநோய் என்பது உங்கள் குதப்பகுதியை சுற்றியுள்ள வீக்கமான நரம்புகளின் புடைப்புகள் என்று சொல்லலாம். இதை தான் மூலநோய்க் கட்டிகள் என்று சொல்கிறோம். மூலநோய் அதன் இருப்பிடத்தின் அடிப்படையில் உள் மூலம், வெளி மூலம் என இரண்டு வகையாக வகைப்படுத்தலாம். வெளிப்புற மூல நோய் குதப் பகுதியைச் சுற்றி நிகழும்போது, ​​உள் மூலமோ ஆசனவாயின் உட்புறச் சுவற்றில் ஏற்படுகிறது. சுருங்கச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால் அது வெளி மூலம், அது தெரியவில்லை என்றாலோ, அனால் மூலநோயின் அறிகுறிகளுடன் இருந்தாலோ, அது உள் மூலம்.


வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளால் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. மூலநோய் எந்த நோய்க்கிருமியாலும் ஏற்படாத ஒரு நிலை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பலர் மூலநோயை  எப்படி  பெற்றார்கள் என்பது பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர். மூலநோய் ஒரு தொற்று நோய் என்று சிலர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒரு பார்வை ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பகரும் வழிமுறை மூலநோய்க்கு அறவே இல்லை. அவை பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. அவற்றில் முதன்மையானது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் தூண்டப்பட்ட நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகும். மூலநோய்க் கட்டிகள் மோசமாக பாதிக்கப்பட்டு அதில் தொற்று ஏற்பட்டாலும், அதுவும் தொற்றுநோய் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆக மூலநோய் என்பது எந்த நிலையிலும் ஒரு தொற்றுநோய் இல்லை.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

No comments:

Post a Comment