மூலநோய் இருந்தால் வலி, அசவுகரியம், நமச்சல் எல்லாம் சேர்ந்து நமக்கு தொல்லை கொடுக்கும். மூலநோய் உள்ளவர்களுக்கு பகலில் நமச்சல் இருந்தாலும், இரவில் தான் அதை அதிகமாக உணருவார்கள். அதிகமாக மூலநோய் கட்டியில் இருந்து வெளியேறும் திரவம் ரணம் ஏற்படுத்துவதால் தான் இந்த நமச்சல் ஏற்படுகிறது. இந்த நமச்சலானது, மூலநோய் கட்டியில் இருந்து வெளியேறும் திரவம் சருமத்தின் மேல் படுவதால் தான ஏற்படுகிறது.
உள்மூலம் இருந்தால், உடல் அதிகமாக திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த திரவம் மூலநோய்க்கு கட்டி வழியாக வெளியேற்றப் படுகிறது. இது தோல் எரிச்சலையும், நமச்சலையும் ஏற்படுத்துகிறது. பகல் வேளையில், நாம் மற்ற வேளைகளில் மூழ்கி இருப்பதால் இந்த நமைச்சலை அதிகம் உணருவதில்லை. இரவு நேரங்களில் எந்த வேலையும் இல்லாதபோது தான் இந்த நமைச்சலை நிதர்சனமாக உணர்கிறோம். இது ஒரு வித மாயை என்றே சொல்லவேண்டும். அதாவது இரவில் அதிகமாக தோன்றினாலும், பகலிலும் அதே அளவு நமச்சல் இருக்கிறது என்பதே உண்மை. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பகல்வேளையில் நடந்து பல வேலைகள் செய்வதால், ஆசனவாய்க்கு காற்றோட்டம் கிடைக்கிறது. இந்த காற்றோட்டம் தூங்கும் இரவு வேளைகளில் கிடைப்பதில்லை. இதனாலும் நமச்சல் இரவுகளில் அதிகம் இருக்கிறது. மலச்சிக்கல் இருந்தால் இந்த திரவ வெளிப்பாடு அதிகம் ஏற்படுகிறது. இது நமைச்சலை ஏற்படுத்துகிறது. சிறிய வயதினருக்கு நமச்சல் இருந்தால் குடலில் உள்ள புழுக்கள் காரணம் என்று சொல்லலாம். இதே மூத்த வயதினருக்கு ஏற்பட்டால், இது கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்கும் காரணத்தினால் வருவது என்று உணரவேண்டும். சில நேரங்களில் பெரியவர்களுக்கும் குடற்புழுக்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மூலநோய் மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com

No comments:
Post a Comment